இதயங்களைக் காவுகொண்ட இளைய தமிழ் வானொலியே

விண்ணதிலே தண் மதிபோல்,
வீசுகின்ற தென்றலை போல்,
விலையில்லாத வைரம் போல்,
வானலையில் வந்தவனே....

தமிழுக்கு உயிர் தந்து
தரணியெல்லாம் உருகொண்டு
தமிழ் வளர்க்கும் திருத்தொண்டை
தலை நிமிர்ந்து செய்பவனே

கம்பனும் கவியரசும்
கவிதை கொண்டு தமிழ் வளர்க்க,
தமிழ் வளர்க்கும் கவிஞர்களை
வானலையால் நீ வளர்க்க,

காலை வரும் கதிரவனும்
மாலையிலே மறைந்து போக,
கலை வளர்க்கும் பணியதனை
காலமெல்லாம் தொடர்பவனே ,

இணையத்தளம் வழியாக
இரண்டாண்டு தமிழ் வளர்த்து
இதயங்களைக் காவுகொண்ட
இளைய தமிழ் வானொலியே

இன்று போல் நூற்றாண்டு
இதமான ஒளி வீசி
இயற்கை உள்ள காலம் வரை
வாழ்வாங்கு வாழியவே.....

L.Vinothkumar,
Announcer strfm radio
srilanka