இலங்கை தமிழோசை வானொலியே!

இலங்கை தமிழோசை வானொலியே!

இலங்கை தமிழோசை வானொலியே – நீ சர்வதேசமெங்கும் புகழுடன் வாழுகிறாய் உன் சேவையில் இன்பம் அடைகிறார்கள்- தமிழ் பேசும் நெஞ்சங்கள்

உன்னோடு நான் இணைந்து அறிவிப்பாளனாய் வலம் வந்தாலும் என்னை அறிவிப்பாளனாய் பெற்றெடுத்த தாய் நீயல்லவா

அறிவிப்பாளனாய் ஆவதற்கு ஆசைகள் என் மனதில் ஊற்றெடுத்த வேளையிலே பண்புள்ள மனிதனாய் பழகுவதில் எளிமையாய் எழில் கொண்ட மகாராசன் தத்தெடுத்த வேளையிலே குளிர்ந்ததையா- என் இதயம்

என் வாழ்வில் கலையகத்தை பார்க்கும் கனவு இருந்தாலும் கனவினை நனவாக்கிய கதாநாயகனும்இகாலத்தால் அழியாத இடத்தினை என் உள்ளத்தில் பெற்ற வானகமும் நீ தானே

நான் இந்த மண்ணில் இருந்து மறையும் இறுதி நொடியும் உம்மை மறக்காது என் இதயம் ' நீ நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை என் இதயத்தில்'

என் உள்ளம் துடி துடிக்கும் ஒவ்வொரு நொடியிலும் உன் ஞாபகங்கள் வந்து போகுதய்யா அந்த ஞாபகங்களுக்கு சொந்தக்காரனாய் என் இதய கோபுரமாய் இருப்பவன் இலங்கை தமிழோசை வானொலி
ஈன்றெடுத்த பிதா மகன் திரு யு.அ.ஜெசீம்


நீ வாழ்க....வாழ்க தமிழோசை வளர்க உன் தமிழ்ப்பணி என்று உன் நினைவுகளோடும் என்றென்றும் நேயர்களின் நினைவுகளோடும் இலங்கை தமிழோசை வானொலியின் சுவாசமுமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் நான்


சத்தியமூர்த்தி பாலசுப்ரமணியம்
அறிவிப்பாளர் தமிழோசை